தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதி இடைத்தேர்தலை 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுடன் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை அறிவிக்க வேண்டும் என திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் இத்தொகுதிகளுக்கான தேர்தல், மே 19 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், இந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "வரும் மே 19 அன்று நடைபெறவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி), திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளர்களாக, சூலூரியில் பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் சரவணன், ஒட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்" என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
4 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
57 mins ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago