மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு கல்லூரிகள் உள்ளதை நிரூபிக்கத் தயார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி களம் காண்கிறார். அவரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார் செந்தில் பாலாஜி. அப்போது பேசிய அவர், ''முன்பு நடந்த வருமான வரித்சோதனை ஒன்றின்போது, வீடு தமக்குச் சொந்தமானது இல்லை என்று கூறியவர் தம்பிதுரை. அவருக்குச் சொந்தமாக பல்வேறு இடங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அது தம்முடையது இல்லை என்று தம்பிதுரையால் கூறமுடியுமா?
தம்பிதுரைக்கு தைரியமிருந்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில், கல்லூரி இருப்பதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். அவர் சொல்லுகிற தேதியில் நாங்கள் மேடை அமைத்துக் காத்திருக்கிறோம். அந்த மேடைக்கு வந்து அவருக்குக் கல்லூரி இல்லை என்பதைச் சொல்லட்டும். நாங்கள் அவருக்குக் கல்லூரி இருக்கிறது என்று கூறுவதை அவரால் மறுக்க முடியுமா?'' என்றார் செந்தில்பாலாஜி.
ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இருந்த செந்தில்பாலாஜி, அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
13 hours ago