குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (மார்ச் 3) மாலை கோவை வருகிறார். கோவையில் நாளை நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 3.40 மணிக்கு கோவை வரும் அவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை சூலூ ரில் உள்ள இந்திய விமானப் படை தளத்துக்குச் செல்லும் குடி யரசுத் தலைவர், ‘கலர்ஸ் பிர சென்டேஷன்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில், அங்கு இயங்கி வரும் ‘5 பேஸ் ரிப்பேர் டிப்போ’ மற்றும் தெலங்கானா மாநிலம் ஹக்கிம்பேட் விமானப் படை தளப் பிரிவுகளை கவுர விக்கிறார். பின்னர், அங்கிருந்து கோவை திரும்பும் அவர், விருந் தினர் மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கிறார்.
மாலையில் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத் தில் உள்ள ஈஷா யோகா மையத் துக்குச் செல்கிறார். அங்கு நடை பெறும் 25-ம் ஆண்டு மகா சிவ ராத்திரி விழாவில் பங்கேற்கிறார். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவுடன், தியான லிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத ஆராதனையிலும் பங்கேற்கிறார்.
இதையடுத்து, இரவு கோவை திரும்பும் அவர், அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். வரும் 5-ம் தேதி காலை விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, கோவை யில் 5 ஆயிரம் போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஓடிடி களம்
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
தமிழகம்
9 hours ago