புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் வார்டுகள் மறுசீரமைத்து அரசாணை வெளியீடு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுசீரமைப்பு செய்து அதன் விவரங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2006-ல் கடைசியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து கடந்த 2011 முதல் தற்போது வரை நடத்தப்படாமல் உள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த 8.5.2018-ல் புதுச்சேரியில் வார்டுகளை 4 வார காலத்துக்குள் சீரமைத்து, 8 வார காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வார்டுகள் மறுசீரமைத்து அரசாணையை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம், ஓபிசி- 33.5 சதவீதம், எஸ்சி இடஒதுக்கீடு உள்ளாட்சி மக்கள் விகித அடிப்படையில் நியமிக்கப்படும். எஸ்டி- 0.5 சதவீதம். தற்போது அரசாணை அரசு இணையத்தில் உள்ளது. ராஜ்நிவாஸ் இணையத்திலும் பகிர்ந்துள்ளோம்.

வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் புதுச்சேரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் மூலம் 1,147 பிரதிநிதிகள் மக்கள் சேவைக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜனநாயக அடிப்படையில் மக்களின் தேவைகள் பூர்த்தியாகும். கூடுதல் நிதி இந்திய அரசிடம் இருந்து கிடைக்கும்

என்று கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்