சந்திராயன், மங்கள்யான் முயற்சி இன்று வெற்றி பெற்று இந்தியா முன்னேறிட காங்கிரஸ் அரசு வகுத்த திட்டங்களே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்: "இந்திய நாடு அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய முகமைகளுக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என பெயரிட்டு செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பி, அதுவும் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் பாதையில் நிலைநிறுத்தி வெற்றி கண்ட இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு 2012 ஆகஸ்ட் 3-ம் தேதி இந்த முயற்சிக்காக 450 கோடி ரூபாயை ஒதுக்கியது. அப்போது தொடங்கிய சந்திராயன் மறறும் மங்கள்யான் முயற்சி இன்று வெற்றி பெற்றுள்ளது என்பதை நினைக்கும் போது இந்தியா முன்னேறிட காங்கிரஸ் அரசு செய்த இமாலய சாதனை என்று நான் நினைக்கிறேன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago