சென்னை விமான நிலையத்தில் தமிழிசையின் கணவர் பணம் ரூ.50 ஆயிரம் திருட்டு: போலீஸில் புகார்

By செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் தன்னுடைய லக்கேஜில் வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பணம் மாயமானதாக தமிழிசையின் கணவர் சௌந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருப்பவர் தமிழிசை. இவரது கணவர் சௌந்தரராஜன். பிரபலமான மருத்துவர் ஆவார். சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பணி நிமித்தமாக கடந்த மாதம் 11-ம் தேதி கொழும்புவுக்கு சென்றார் சௌந்தரராஜன். அப்போது அவரது லக்கேஜில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.50 ஆயிரம் மாயமாகியுள்ளது.

பணம் காணாமல் போனது குறித்து தற்போது சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் சௌந்தரராஜன் புகார் அளித்துள்ளார். அதில் தனது லக்கேஜ் பையில் வைத்திருந்த பணம் விமான பயணத்தின்போது காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

57 secs ago

சினிமா

10 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்