அபிநந்தனை உடனடியாக மீட்க இந்திய அரசு தூதரக முயற்சிகளின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று (பிப் 27) தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இன்று காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.
இதுகுறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி பாகிஸ்தான் ராணுவப் பிடியில் சிக்கியதை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து அபினந்தனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக இன்று ராமதாஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப் படை விமானியும், சென்னையைச் சேர்ந்தவருமான அபிநந்தனை உடனடியாக மீட்க இந்திய அரசு தூதரக முயற்சிகளின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 mins ago
க்ரைம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
உலகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago