108 ஆம்புலன்ஸ் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவு: 32 லட்சம் பேர் பயனடைந்தனர்

By செய்திப்பிரிவு

108 அவசர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இச்சேவையின் மூலம், தமிழகத்தில் இதுவரை 32 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களும் பயன் அடையும் வகையில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது.

இதனால், குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் திடீர் விபத்து ஏற்பட்டாலோ நோய் வாய்பட்டாலோ உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் இச்சேவையின் மூலம் 32 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதில், கர்ப்பிணிகள் 8.39 லட்சம் பேரும், சாலை விபத்தில் காயம் அடைந்தவர்கள் 7.59 லட்சம் பேரும், மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் 1.73 லட்சம் பேரும் அடங்குவர்.

தமிழகம் முழுவதும் இச் சேவையில் 684 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் ஈடுபடுத் தப்படுகின்றன. மேலும், மலைப் பகுதிகளில் செல்வதற்காக பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்ட 30 ஆம்புலன்ஸ் வாகனங்களும், பச்சிளம் குழந்தைகளுக்காக 37 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்