இனியும் தன்னால் முதல்வராக முடியாது என்ற விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார்: டிடிவி தினகரன் தாக்கு

By செய்திப்பிரிவு

திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திறந்து வைத்த டிடிவி தினகரன் பிறகு செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

 

இதில், குறிப்பாக, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சமீபகாலங்களாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறாரே என்று கேள்வி எழுப்பியபோது டிடிவி தினகரன் கூறியதாவது:

 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்- அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல்- அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்.

 

எனவே இனியும் முதல்வர் ஆக முடியாத விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார். இதனால் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சித்து வருகிறார்.தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பாஜகவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பாஜக அமைச்சர்களுடன், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். இதன் மூலம் அவர் நாடகம் ஆடுகிறார்.

 

இவ்வாறு கூறுகிறார் டிடிவி தினகரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 mins ago

விளையாட்டு

52 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்