சென்னை வந்துகொண்டிருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பயணிகளிடம் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் பெரியசாமி (50). இவர் தொழில் சம்பந்தமாக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 7-ம் தேதி இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், தனது பெட்டியை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் எழுந்து பார்த்தபோது தனது பெட்டியைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதில் ரூ.10.36 லட்சம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த ரயிலின் அடுத்த பெட்டியில் சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சண்முகசுந் தரம் (31) என்பவர் தனது குடும் பத்துடன் பயணம் செய்தார். நேற்று அதிகாலை பெரம்பூர் அருகே வந்தபோது, அவரது மனைவியின் கைப்பையில் இருந்து ரூ.1 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் குறித்துஇருவரும் சென்ட்ரல் ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்துள்ள னர். ஒரே ரயிலின் அடுத்தடுத்த பெட்டியில் திருட்டு சம்பவங்கள் நடந்திருப்பதால், ஒரே நபர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago