சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் ஹோட்டல்களில் வரு மான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
தமிழகம் மற்றும் வெளிநாடு களிலும் கிளைகளைக் கொண்ட சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் ஹோட் டல்களில் நேற்று காலையில் திடீரென வருமான வரித்துறையி னர் சோதனை நடத்தினர். இந்த ஹோட்டல்களின் கார்ப்பரேட் அலு வலகங்களிலும், உரிமையாளர் களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
சென்னை வடபழனி என்.எஸ்.கே சாலையில் உள்ள சரவண பவன் கார்ப்பரேட் அலுவலகம், ஹோட்டல் உரிமையாளர் ராஜ கோபாலின் அசோக் நகர் வீடு, அவரது மகன்கள் சிவக்குமார், சரவணன் ஆகியோரின் வீடுகள், ஹோட்டலின் முதன்மை செயல் அதிகாரி கணபதியின் கே.கே.நகர் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல தி.நகர் கிராமி சாலையில் உள்ள அஞ்சப்பர் ஹோட்டலின் கார்ப்பரேட் அலுவல கத்திலும், அடையார் காந்தி நகரில் உள்ள கிராண்ட் ஸ்வீட்ஸ் ஹோட்டலின் கார்ப்பரேட் அலுவல கத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த ஹோட்டல்களின் உரிமையா ளர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடு களிலும் சோதனை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 3 ஹோட் டல் நிறுவனங்களுக்கும் தொடர் புடைய 32 இடங்களில் சோதனை நடைபெற்றது. நேற்று காலை 8 மணியளவில் அனைத்து இடங் களிலும் ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது.
நூற்றுக்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடு பட்டனர். இரவு வரை நடை பெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப் பற்றிச் சென்றனர். வரி ஏய்ப்பு புகார்களின்பேரில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago