டைடல்பார்க் அருகே லோடு வேன் மீது கார் நேருக்கு நேர் மோதல்: வேன் டிரைவர் பலி

By செய்திப்பிரிவு

டைடல் பார்க் அருகே காரில் வந்த இளைஞர் லோடு வேன் மீது மோதியதில் வேன் டிரைவர் பலியானார்.

சென்னை துறைமுகம் கிளைவ் பேட்டரியில் வசித்தவர் பாஸ்கர் (51). லோடு வேன் ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமாயி (45). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்றிரவு லோடு வேனில் பழைய மகாபலிபுரம் சாலையில் சரக்குகளை இறக்கி விட்டு வீடடிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பார்க் அருகில் திரும்பும் போது அதிவேகமாக வந்த கார் ஒன்று லோடு வேன் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாஸ்கர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிவேகமாக காரை ஓட்டி வந்த அடையாறைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பாரி (24) என்பவரை சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

11 hours ago

வாழ்வியல்

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்