11 கிலோ தங்கம், வெள்ளி கொள்ளை: விசாகப்பட்டினத்தில் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி கொள்ளை போன வழக்கில் 2 பேரை தனிப்படை போலீஸார் விசாகப்பட்டினத்தில் கைது செய்துள்ளனர்.

கொருக்குப்பேட்டை உள்ளா ரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (37). இவர் சவுக்கார்பேட்டையில் நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் பீரோவில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி மற்றும் 1.5 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன.

போலீஸாருக்கு தகவல்

இதுகுறித்து கொருக்குப் பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் விசாகப் பட்டினத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் விசாகப்பட்டினத்தில் பதுங்கி இருந்த 2 பேரைக் கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் சந்தோஷ் நகைப் பட்டறையில் வேலை செய்தவர் கள் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

56 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்