தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி: தமிழிசை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பாஜக தலைமை யில் வலுவான கூட்டணி அமை யும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சேலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பாஜக வலுப் பெற்று வருகிறது. பாஜக தலை மையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும். திமுகவை விட கொள்கை மற்றும் தொண் டர் பலத்துடன் கூடிய வலுவான கூட்டணியை பாஜக அமைக்கும். 2019 தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் இந்தியாவில் அந்நிய முதலீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 38 ஆயிரம் பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு கிடைத்துள் ளது. மத்திய பாஜக அரசு சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.1.81 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில்தான் அதிகம் பேர் கடனுதவி பெற்றுள்ளனர்.

ஜன.5, 6-ல் 2,500 இடங்களில் பாஜக வாக்குச்சாவடி மாநாடு நடக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

24 mins ago

க்ரைம்

59 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்