விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. பாரத் இந்து முன்னணி தலைவர் சிவாஜி என்ற சிவக்குமார் என்பவர்தான் இதைச் செய்ததாக விசிகவினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தண்டையார் பேட்டையில் உள்ள சிவாஜி வீட்டுக்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 30 பேர், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து சிவாஜியை போலீஸார் கைது செய்தனர்.
நடவடிக்கை தேவை
தன் மீது தாக்குதல் நடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவாஜி யும் புகார் அளித்தார். அதன்பேரில் தண்டையார் பேட்டை போலீஸார் விசிக நிர்வாகிகள் தண்டையார் பேட்டை ஜெகன், ஷாஜகான், ஆறுமுகம், கொடுங்கையூர் சிவக்குமார், சரவணன், கோபி, கொருக்குப்பேட்டை ராஜி, மூலக்கொத்தளம் சிவபேரறி வாளன் மற்றும் முகமது ஜாகிரை கைது செய்தனர்.
திருமாவளவன் பற்றி அவதூறு பரப்பியதாக ஆர்.டி.ஐ.செல்வம் என்பவரை ஆர்.கே.நகர் போலீஸார் ஏற்கெனவே கைது செய்த னர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
34 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஓடிடி களம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
5 hours ago