இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த அவதூறு செய்திக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சிங்கள இனவாத அரசான இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக எழுந்துள்ள கட்டுரையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரீகமான முறையில் புகைப்படம் ஒன்று வெளியிட்டிருப்பதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கை கடற்படை அத்துமீறி தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்கிறது. இதுகுறித்து, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். அதை கொச்சைப்படுத்தும் வகையில் இது உள்ளது. மேலும், தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல, மாண்புமிகு பாரத பிரதமரையும் இழிவுபடுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற விசமத்தனமான தரம்தாழ்ந்து செயல்படும் விமர்சனங்களைக் கண்டு தமிழக மக்கள் கொந்தளித்துள்ளார்கள். எனவே, இதுபோன்ற சம்பவங்களில் இலங்கை எதிர்காலத்தில் ஈடுபடக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய அரசு, இலங்கையுடனான தற்போதைய உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஓடிடி களம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
தமிழகம்
7 hours ago