தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட வகைகளில் சாலை விதிகளை மீறியதாக 4,482 பேருக்கு ரூ.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் 65,562 சாலை விபத்துகள் நடந்து, 16,157 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவீத விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன. இதன் காரணமாக, அதிக வேகத் தில் வாகனத்தை ஓட்டுவது, சிக்னலில் சிவப்பு விளக்கை மதிக்காமல் தாண்டிச் செல்வது, சரக்கு வாகனங்களில் அனுமதி அளவைவிட அதிக பாரம் ஏற்றுவது மற்றும் அதிக நபர்களை ஏற்றுவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு
சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்தல், அதிக விபத்துகள் நடக்கும் இடங்களை தேர்வு செய்து கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கை களை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இதற்கிடையே, தமிழகம் முழுவ தும் வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்டீஓ) மற்றும் போக்கு வரத்து போலீஸார் மூலம் கடந்த 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தீவிர வாகன சோதனை நடத்தப் பட்டது.
இதுகுறித்து தமிழக போக்கு வரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் நடத்தப் பட்ட சோதனையில், அதிக வேகமாக சென்ற 324 பேர், சீட் பெல்ட் அணியாத 1,320 பேர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 1,081 பேர், ஹெல்மெட் அணியாத ஓட்டுநர்கள் 2,677 பேர், பின்னால் உட்கார்ந்து சென்ற 753 பேர், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 34 பேர் என பல்வேறு சாலை விதிமுறைகளை 4,482 பேருக்கு சோதனை அறிக்கை (Check Report) அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் ரூ.31 லட்சத்து 67 ஆயிரத்து 670 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சத்து 15 ஆயிரத்து 945 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள் ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago