சென்னை மாநகரப் பேருந்தில் பயணி தவறிவிட்ட ரூ.2.47 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநரை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா நகர் பணிமனையைச் சார்ந்த ‘தடம் எண் 114’ பேருந்தில் நடத்துநர் சையது இஸ்மாயில், ஓட்டுநர் டில்லி ஆகியோர் கடந்த 17-ம் தேதி மாலை பணியில் இருந்தனர். அன்று இரவு 11 மணி அளவில் பேருந்தில் யாரோ ஒரு பயணி தவறவிட்டுச் சென்ற ரூ.2.47 லட்சம் ரொக்கத்தை திருமங்கலம் காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்தனர்.
குடியரசு தினத்தில் கவுரவிப்பு
நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் பணியாற்றிய அவர்கள் இருவரையும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம், பல்லவன் இல்லத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். பரிசு வழங்கியும் கவுரவித்தார். 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவிலும் அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
44 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
வணிகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
க்ரைம்
12 hours ago