அனகாபுத்தூரில் பெண் படுகொலை 

By செய்திப்பிரிவு

பல்லவரம்

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் சாலையில் ஹோட்டல் நடத்தி வருபவர் தேவதாஸ். இவரது மனைவி மனோன்மணி என்ற விஜயலட்சுமி (55). இவர்கள் அதே பகுதியில் வசித்து வந்தனர். இவர்களின் ஹோட்டலில் சீனிவாசன், இளையராஜா என்ற இருவர் வேலை பார்த்து வந்தனர். அவர்களின் நடவடிக்கை சரியில்லாததால் தேவதாஸ் அவர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி, அவரது வீட்டில் படுக்கையறையில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் கொலை செய்யபட்டுக் கிடந்தார். 15 பவுன் நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. புகாரின்பேரில் சங்கர் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சீனிவாசன், இளையராஜா இருவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்