மெரினா கடறகரையில் அதிகாலையில் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்ப்ட்டுள்ளார். அவர் உடலை மணல்போட்டு மூடிச்சென்றுள்ள மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மெரினா கடறகரையில், மெரினா நீச்சல்குளம் பின்புறம் இன்று காலை நடைப்பயிற்சி சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாதி மூடியும் மூடாமலும் பெண் உடல் ஒன்று மணலில் புதைந்து கிடந்ததை பார்த்தவர்கள் அருகில் சென்று பார்த்தனர்.
மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் அந்தப்பெண் பிணமாக கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அண்ணா சதுக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சமபவ இடத்திற்கு வந்த அண்ணா சதுக்கம் போலீஸார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 லிருந்து 35 வயதுக்குள் இருக்கும். மாநிறமாக இருக்கும் அவர் கடுமையாக தாக்கப்பட்ட அறிகுறி தெரிந்தது. அவர் முகத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்களும், மூக்கில் ரத்தமும் வழிந்த நிலையில் கிடந்தார்.
அவர் அருகில் அந்தப்பெண்ணின் காலணியும், ஒரு ஜோடி ஆண்கள் அணியும் காலணியும் கிடந்தது. இரண்டு மூன்று காலி குவார்ட்டர் மதுபாட்டில்கள் கிடந்தது. அருகில் அந்தப்பெண்ணின் கைப்பை கிடந்தது அதில் சாதாரண வகை செல்போன்கள் 3 இருந்தது.
அதில் இரண்டு சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. ஒரு போனில் கடைசியாக பேசப்பட்டிருந்த 3 நம்பர்களை சேகரித்த போலீஸார் அதற்கு போன் செய்து பார்த்தனர். அப்போது அவர்கள் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் மீண்டும் மீண்டும் போன் செய்த போலீஸார் அவர்கள் 3 பேரிடமும் பேசியபோது அந்தப்பெண் யாரென்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளனர்.
அந்த 3 பேரையும் போலீஸார் நேரில் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மற்ற 2 செல்போன்களை ஆய்வு செய்ய உள்ளனர். கைப்பையில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா எனவும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் அல்லது அதிகாலையில் தனிமையில் இருக்க அந்தப்பெண்ணை அழைத்து வந்த மர்ம நபர் அவருடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம், பின்னர் தனிமையில் இருந்த அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அந்தப்பெண்ணை சரமாரியாக தாக்கி கொலை செய்திருக்கலாம், பதற்றத்தில் மண்ணைப்போட்டு மூடிவிட்டு அந்த நபர் தப்பி ஓடியிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
மேற்கொண்டு நடக்கும் விசாரணையில்தான் உண்மையான விபரங்கள் தெரியவரும். ஆள் நடமாட்டம் உள்ள சென்னையின் முக்கிய பகுதியான மெரினா கடற்கரையில் இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
சினிமா
18 mins ago
இந்தியா
32 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
9 hours ago