பெண் நீதிபதிக்கு பாலியல் தொந்தரவு: ம.பி. நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

பெண் நீதிபதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குவாலியர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய பெண் நீதிபதி, மத்தியப்பிரதேசம் உயர் நீதிமன்ற நீதிபதி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவர் தன்னை மீண்டும் கூடுதல், செசன்ஸ் நீதிபதியாக பணியமர்த்துமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

மேலும், தனது குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த அவர் அந்த விசாரணைக் குழுவுக்கு மாறாக, இரண்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழுவையும் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

விசாரணைக் குழு மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும் அவ்வாறு குழு மாற்றப்படாவிட்டால் தான் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

விசாரணைக் குழுவுக்கு தடை:

இந்நிலையில், பெண் நீதிபதியின் கோரிக்கை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்