வேன் கவிழ்ந்து விபத்து: ஓபிஎஸ் பாதுகாப்பு போலீஸார்  9 பேர் காயம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ் வேன் விபத்துக்குள்ளானதில் 9 போலீஸார் காயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை பகுதியில் கஜா புய லால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென் றார். அதற்கான பாதுகாப்புக்காக தஞ்சாவூரிலிருந்து எஸ்ஐ சரவ ணன் தலைமையில், 9 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் வேனில் சென்றுள்ளனர். அப் போது தஞ்சாவூர் - பட்டுக் கோட்டை சாலையில் ஒரத்தநாடு பகுதியில் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத் தில் கவிழ்ந்து வேன் விபத்துக் குள்ளானது.

இதில் எஸ்ஐ சரவணன், காவ லர்கள் அருண், சதீஷ், சண்முகம், கவின் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், வீரமணிகண் டன், குணா, ராகுல் ஆகியோ ருக்கு சிறு காயங்கள் ஏற்பட் டன. அவர்கள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்