கன்னியாகுமரி அருகே 85 வயது கணவர் இறந்த துக்கத்தில், அவரது உடல் அருகிலேயே 80 வயது மனைவியும் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியை அடுத்த பால்குளத்தைச் சேர்ந்தவர் திரவியம் (85). இவரது மனைவி ராஜம்மாள்(80). இத்தம்பதி யருக்கு 4 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி, அவர்களது குழந்தைகளுக்கும் கூட திருமணமாகிவிட்டது.
நோயால் அவதிப்பட்ட நிலை யில் புதன்கிழமை மாலை திரவியம் இறந்தார். வியாழக் கிழமை காலை 10 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப் படும் என உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ராஜம்மாள் புதன்கிழமை முதல் யாரிடமும் பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. கணவரின் உடலை விட்டு அகலா மல், அவரை நினைத்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தார்.
வியாழக்கிழமை காலை யில் அவரது வீட்டில் உற வினர்கள் குவிந்திருந்தனர். திரவியத்தின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அவர்கள் ஆயத்தமாகினர். அருகில் அமர்ந் திருந்த ராஜம்மாள் களைப்பால் தூங்கிவிட்டார் என நினைத்தனர். நீண்ட நேரமாகியும் அவரிடம் எந்த அசைவும் இல்லாத நிலை யில் காலை 9.45 மணிக்கு ராஜம்மாளை எழுப்ப முயன்றனர். அப்போதுதான் அவர் இறந்துபோனது தெரிய வந்தது. கணவரின் உடல் அருகி லேயே அவர் இறந்துபோனது உறவினர்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
இறப்பிலும் இணை பிரி யாத தம்பதிகளை நினைத்து உறவினர்களும், ஊர்ப் பொது மக்களும் வியப்படைந்தனர்.
இருவரது இறுதிச் சடங்கும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. மதியம் 1 மணிக்கு இருவரது உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன. இவர்களின் மரணத்தால் பால்குளம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago