அமிர்தசரஸ் ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை பஞ்சாப் மாநில அரசு செய்து தர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாபில் தசரா விழாவின் போது நடக்கும் ராவண வதம் நிகழ்ச்சியை தண்டவாளத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க் கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''50 பேருக்கும் மேல் பலியான அமிர்தசரஸ் ரயில் விபத்து, மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தர கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago