நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் பெட்ரோல்-டீசல் விலை மேலும் 15 ரூபாய் குறையும் என, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனால், அதன் விலையைக் குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் பெட்ரோல் - டீசல் விலை 15 ரூபாய் அளவுக்கு குறையும் என, பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, “இன்றைக்கு அனைவரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் கடந்த 5-6 நாட்களாக லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்களிடம் ஒட்டு கேட்பதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கிறதல்லவா? அதனால், பெட்ரோல் - டீசல் விலை இன்னும் 15 ரூபாய் குறையும்” என பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
இந்தியா
27 mins ago
சினிமா
44 mins ago
வலைஞர் பக்கம்
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago