கேரள மக்களுக்கு உதவுவோம்: நிவாரணப் பொருட்கள் இடுக்கி நோக்கி சனிக்கிழமை பயணம்

By செய்திப்பிரிவு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து வாடும் கேரள மக்களுக்கு உதவ ஆதரவுக் கரங்கள் நீள்கின்றன.

நமது அண்டை மாநிலமான கேரளா தொடர் கனமழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தண்ணீரில் மிதக்கிறது. தொடர்ந்து பெய்யும் பெருமழை காரணமாக உயிரிழப்பு, உடைமை இழப்பு காரணமாக கேரள மக்கள் கடும் இன்னலை அனுபவித்து வருகின்றனர்.

உடைமைகளை, இருப்பிடங்களை இழந்த மக்களுக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுகின்றன.பலரும் உதவிக்கரம் நீட்டும் இவ்வேளையில் கேரள மக்களுக்கு உதவும் எண்ணம் இருந்து எங்கு போய் நிவாரணப் பொருட்களை அளிப்பது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு உதவவே இந்தப் பதிவு.

வரும் சனிக்கிழமை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

உடனடியாக தேவைப்படும் பொருட்கள்:

சானிடரி நாப்கின்கள், உள்ளாடைகள், டெட்டால், போர்வைகள், டவல்கள் உள்ளிட்டவை.

இதுபோக தங்களால் இயன்ற பொருட்களை மேற்கண்ட முகவரிக்குச் சென்று நேரில் அளிக்கலாம். கேரள மக்களுக்கு உதவுவோம், இன்னலைக் களைவோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:

NORKA-ROOTS Satellite Office, Chennai, Ground Floor, KTDC Rain Drops Business Hotel, 169/2, Greams Road,Chennai - 600 006.

Ph:-044-28293020, e_mail: norkachennai@gmail.com, Cont: 9444186238(Anu ,kerala)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

14 hours ago

மேலும்