மீனவர்களின் படகுகளை மீட்க தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை செல்கின்றனர்.
பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மீன்பிடித்த ராமேசுவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் 168 படகுகள் கடந்த 4 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் இலங்கை கடலோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டன. பராமரிப்பின்றி பல காலமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் கடல் அலைகள் மற்றும் காற்றின் வேகத்தால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி கடுமையாக சேதமடைந்தன.
இதற்கிடையில், மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்ததை அடுத்து, இந்த படகுகளை விடுவிக்க இலங்கை அரசு கடந்த மாதம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, படகுகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில், படகுகளை மீட்பதற்காக தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை செல்கின்றனர். இலங்கை அதிகாரிகளை சந்தித்து படகுகளின் சேத விவரங்களைக் கணக்கிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுக் கொண்டுவர அதிகாரிகள், படகு
உரிமையாளர்கள், மெக்கானிக்கு கள் குழுவினர் இம்மாத இறுதியில் செல்ல திட்டமிட்டுள்ளோம்.
மெக்கானிக்குகளை வைத்து சரிபார்த்தால்தான், படகுகளுக்கு எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். படகுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து படகுகளையும் தமிழகம் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago