மழை குறைந்ததால் சென்னை, வேலூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெயில் சதம்

By செய்திப்பிரிவு

மழை குறைந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதன் காரணமாக 7 நகரங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவானது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, சிவகங்கை மாவட்டம் திருபுவனம், கோவை மாவட்டம் சின்னகள்ளார் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை உயர்வு

மழை குறைந்ததன் காரணமாக வெப்பநிலை உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி 7 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக  மதுரையில் 101.48, தஞ்சாவூர்  மாவட்டம் அதிராம்பட்டினம், திருச்சி ஆகிய இடங்களில் தலா 100.94,  சென்னை விமான நிலையம் மற்றும் வேலூரில் தலா 100.76, நாகப்பட்டினத்தில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

  வெப்பச் சலனம் காரணமாக அடுத்த சில தினங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்