மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24 ஆயிரத்து 712 கனஅடியாக குறைந்தது.
கேரளா, கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதமாகவே அதிகரித்து காணப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 27 ஆயிரத்து 215 கனஅடியிலிருந்து 24 ஆயிரத்து 712 கனஅடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் 120.05 அடியாகவும், நீர் இருப்பு 93.55 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 24 ஆயிரத்து 215 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நடப்பாண்டிலேயே மேட்டூர் அணை மூன்று முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago