ஜெ. மரணம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நாளை ஆஜர்

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர் டாக்டர் பாஸ்கர், டாக்டர் செந்தில் குமார் ஆகியோர் நேற்று ஆஜராகினர். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிந்து வெளியே வந்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:

விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் நாளை ஆஜராக உள்ளனர். அவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தும். மறுநாள் நாங்கள் குறுக்கு விசாரணை நடத்த உள்ளோம்.

அப்போலோவில் ஜெய லலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே சுமார் 50 நாட்கள் இருந்தவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்