பெண்கள் முன்னேற்றத்துக்கு தொண்டு புரிந்தோர் சமூக சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக சமூக நலத்துறை அழைப்பு

By செய்திப்பிரிவு

தமிழக சமூக நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2018-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் முதல்வரால் வழங்கப்பட உள்ளன.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நி்ர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றி வரும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவ னமாக இருக்க வேண்டும். சமூக சேவகர் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அனுப்பப்பட வேண்டும். மாதிரி விண்ணப்பம், இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் ஆகியவை ‘tnsocialwelfare.org’ என்ற இணையதள முகவரியில் காணலாம். எனவே, அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அணுகி ஜூலை 20-ம் தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்