குளச்சல் அருகே மாணவர்களால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவி, கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் 3 மாணவர்கள், போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையை அடுத்துள்ள செதுவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் குளச்சல் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படிக்கிறார். இவர், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை கேலி, கிண்டல் செய்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக கருமன்கூடல் பேருந்து நிறுத்தத் தில் தனது தோழியுடன், அந்த மாணவி நின்றிருந்தார். அப்போது, தன்னுடன் படிக்கும் கழுவன் திட்டையைச் சேர்ந்த ஸ்ரீசுதன் (22), ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ராஜசிங் (20) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்த விக்னேஷ், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதில் அந்த மாணவி மயங்கி கீழே விழுந்தார். இதைத் தடுத்த மாணவியின் தோழியும் தாக்கப்பட்டார். அப்பகுதி மக்கள், மாணவியையும் அவரது தோழியையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித் தனர். அங்கு அந்த மாணவி கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
குளச்சல் மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் விக்னேஷ், ராஜசிங், ஸ்ரீசுதன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago