திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் முதல்வருக்கு எதிராக வாக்களித்தது தொடர்பாக திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் மற்றும் இதர எதிர்மனுதாரர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப் பித்துள்ளது.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடந்த 2017 பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் முதல்வருக்கு எதிராக வாக்க ளித்தனர்.

இதையடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடாவும், எம்எல்ஏ-வுமான சக்ரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. அதில் பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் தலை யிட முடியாது என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதை எதிர்த்து திமுக தரப்பில் சக்ரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பாக தங்களது தரப்பு விளக்கத்தையும் கோர வேண்டுமென ஓபிஎஸ் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

4 வாரத்துக்குள் பதில்

இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் இதுதொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்கள் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர், சட்டப்பேரவைச் செயலாளர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்