அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 20,000 மாணவர்களுக்கு 500 தணிக்கையாளர்கள் மூலம் சி.ஏ. படிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதல் கட்டமாக ஈரோட்டில் 2,700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 12 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரமும் மற்றும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
இந்தியா
54 mins ago
க்ரைம்
58 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago