அகில இந்திய மோட்டார் காங்கிரஸில் உறுப்பினர்களாக உள்ள லாரி உரிமையாளர்கள், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்திவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிய லாரி ஒன்று கேரளா சென்றது. மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நூருல்லா என்பவர் லாரியை இயக்கினார். விஜய்(21) என்பவர் கிளீனராக பயணித்தார்.
தமிழக-கேரள எல்லையைத் தாண்டியபோது, வாளையாறு பகுதியில் லாரியை வழிமறித்த சிலர் நூருல்லா மற்றும் விஜயை கீழே இறங்கச் செய்து, வாக்குவாதம் செய்துள்ளனர்.
இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கற்களை வீசி விஜய், நூருல்லா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே இறந்தார். நூருல்லா படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த கேரள போலீஸார் நூருல்லா மற்றும் பலியான விஜய் உடலை மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாலக்காடு மாவட்ட கசபா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள லாரி ஓட்டுநர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனரா? அல்லது வேறு எவரேனும் கல்வீசினரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் ஓட்டுநர் நூருல்லாவை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இச்சம்பவத்துக்கு கேரள லாரி உரிமையாளர்கள் சங் கம் மற்றும் தமிழக லாரி உரிமையா ளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர் களுடைய குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இச்செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago