மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ உக்கம்சந்த் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த உக்கம்சந்த், 1980-ம் ஆண்டு நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் அதிமுவில் இணைந்தார். அதே ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் ஜெயலலிதா அணியில் இருந்தார். 1989-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - ஜெயலலிதா அணியில் மதுராந்தகம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உக்கம்சந்த் 1996-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் பதவியை 3 முறை வகித்தவர். தற்போது திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு நேற்று மாலையில் நடை பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 secs ago
தமிழகம்
15 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago