கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

By இரா.வினோத்

கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து குறைந்ததால் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வெகுவாக‌ குறைக்கப் பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரண மாக காவிரி ஆற்றின் குறுக்கே யுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பின.

இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத் துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1. 20 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்த‌து. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 16,693 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 18,056 கனஅடி நீர் திறக்கப்பட்டது. கபினி அணை யின் நீர்வரத்து 17,044 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 16,200 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 34 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

16 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

1 min ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்