சென்னை கடற்கரை - வண்ணாரப்பேட்டை இடையே ரயில்பாதை பராமரிப்புப் பணிகளால் 2 நாளில் 18 மின்சார ரயில்களின் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை கடற்கரை - வண்ணாரப்பேட்டை இடையே ரயில்பாதை பராமரிப்புப் பணிகள் நடக்கவுள்ளதால், இன்றும், நாளையும் மொத்தம் 18 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளச்சேரி - ஆவடிக்கு 10.15, வேளச்சேரி - திருவள்ளூர் மதியம் 12.15, வேளச்சேரி - பட்டாபிராமுக்கு மதியம் 12.55, சென்ட்ரல் - ஆவடிக்கு மதியம் 12.35, திருவள்ளூருக்கு காலை 9.30, ஆவடி - வேளச்சேரிக்கு மதியம் 2.40 மணி, திருவள்ளூர் - சென்ட்ரலுக்கு மதியம் 2.40, ஆவடி - கடற்கரை மதியம் 1.35, திருவள்ளூர் - வேளச்சேரிக்கு காலை 11.05 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் - வேளச்சேரிக்கு மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு மதியம் 2.20 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை கடற்கரை - ஆவடிக்கு காலை 11.10, திருவள்ளூருக்கு மதியம் 1.05, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு மதியம் 1.50 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்களும், சென்ட்ரல் - ஆவடிக்கு மதியம் 12.35, திருவள்ளூருக்கு காலை 9.30 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. ஆவடி - சென்னை கடற்கரைக்கு மதியம் 2.40, திருவள்ளூர் - சென்ட்ரல் மதியம் 2.40, ஆவடி - கடற்கரைக்கு மதியம் 1.35, திருவள்ளூர் - கடற்கரைக்கு காலை 11.05 மணி மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கிடையே, ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு மதியம் 2.20 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

வணிகம்

27 mins ago

சினிமா

49 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்