தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தீக்குளித்து மரணம்

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பெரியாண்டிக்குழியைச் சேர்ந்தவர் ஜெகன் (35). இவர் அதே பகுதியின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.

இவர் நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி சம்பவத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதால், கடந்த இரு நாட்களாக ஜெகன் மனவருத்தத்தில் இருந்துவந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பரங்கிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் கைது

மற்றொரு சம்பவத்தில் வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி பண்ருட்டியை அடுத்த நன்னிக்குப்பத்தைச் சேர்ந்த ரவி என்பவர் பண்ருட்டி அடுத்த விசூர் ரெட்டிப்பாளையத்தில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி கூச்சலிட்டார். போலீஸார் அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்