தூத்துக்குடியில் போலீஸாரின் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர், எஸ்பியிடம் மனு அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து 20 நாட்கள் ஆன நிலையில், இன்னமும் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து பெண்களை மிரட்டி ஆண்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், போலீஸாரின் கைது நடவடிக்கை மக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற நடவடிக்கையால் குழந்தைகள் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. எனவே, கைது நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதோடு, அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
க்ரைம்
34 secs ago
சினிமா
15 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago