சென்னை, ஐஸ்ஹவுஸ் பெசன்ட் சாலையில் காவல் நிலையத்துக்கு சில நூறு மீட்டர் தொலைவில் இளைஞரை கத்தியால் வெட்டி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற நிலையாக மாறி வருவதை சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஐஸ்ஹவுஸ் சிவராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த்(29), இவர் பணி முடிந்து தனது ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தை தாண்டி வந்துகொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை வழிமறித்து தலையில் கட்டையால் தாக்கி செல்போனை பறித்துள்ளனர்.
பின்னர் அவரது வாகனத்தை பறிக்க முயன்றனர். அப்போது ஆனந்த் தர மறுக்கவே அவரை மூன்றுபேரும் கத்தியால் வெட்டி இரு சக்கர வாகனத்தை பறித்து சென்றனர். கையில் வெட்டுக்காயத்துடன் போலீஸில் புகார் அளித்தார்.
அவரை போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கையில் வெட்டுக்காயம் பலமாக இருந்ததால் அறுவைச் சிகிச்சை (Surgical ward) வார்டில் உள்நோயாளியாக ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனந்தை வெட்டியவர்கள் யாரென்று போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
10 hours ago