பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநங்கை ஒருவர், தன் காதல் மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் நாராயணன். இவரது வாரிசு அக்ஷய்தேவ் (28). திருநங்கையான இவருக்கு ஆண் தன்மை அதிகம் இருந்ததால், பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இவருக்கும் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையாகுப்பத்தில் அழகு நிலையம் நடத்தி வரும் இளவரசி என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளவரசி அக்ஷய்தேவுடன சேர்ந்து வாழ மறுத்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அக்ஷ்ய்தேவ் அழகு நிலையம் சென்று காதல் மனைவி இளவரசியை சேர்ந்து வாழ அழைத்துள்ளார். அவர் மறுத்ததால் மனம் உடைத்த அக்ஷ்யதேவ் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துமவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
க்ரைம்
59 secs ago
விளையாட்டு
29 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
52 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago