தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ரஜினிகாந்த் மனம்திறந்து மனசாட்சியோடு பேசியிருக்கிறார் என அதிமுக நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ரஜினிகாந்த் நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமூக விரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கியக் காரணம். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்” என ஆவேசமாக பதிலளித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் கண்டனமும் எழுந்துள்ளன.
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழில் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்று ‘காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும்’ என்ற தலைப்பில் நேற்று கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ரஜினி மனசாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது என்ற முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ரஜினி சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகள் திமுகவினர்தான். பிரச்சினைக்கு ராஜினாமா முடிவல்ல என்று கூறியது பதவி ஆசை உள்ளவர்களுக்கு சரியான பாடம். வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
இந்தியா
34 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago