திமுக எதிர்க் கட்சி இல்லை, எதிர்க்கட்சிதான். எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்டெடுக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''அதிமுகவைச் சேர்ந்த 90 சதவீத தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்தான் இருக்கிறார்கள். நாடாளுமன்றம், சட்டப்பேரவை என எப்போது எந்தத் தேர்தல் வந்தாலும் அமமுக நிச்சயம் வெற்றி பெறும். அதன் மூலம் அதிமுகைவையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்து ஜெயலலிதாவின் வாரிசுகள் நாம்தான் என்பதை நிரூபிப்போம்.
எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்த வழக்கில் நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். ஏனெனில், எங்கள் பக்கம்தான் நீதி இருக்கிறது. சட்டப்பேரவை என்றால் எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். அதனால்தான் திமுக எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வந்து ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் அந்த கோரிக்கை வைத்தேன். அப்போது நான் திமுக கூட்டாளி என்று சிலர் கூறினர். திமுக எதிரிக் கட்சி இல்லை.எதிர்க்கட்சிதான்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
56 mins ago
உலகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago