அன்புமணி தன்னை மட்டும் அதிபுத்திசாலியாக நினைக்கிறார்; தந்தையின் நிழலில் நான் தலைவராக வரவில்லை: தமிழிசை பதிலடி

By செய்திப்பிரிவு

தனக்கு அறிவாற்றல் உள்ளதால் தான் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறேன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் பாஜக பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறது. மிக வெற்றிகரமாக பொறுப்பாளர்களை நியமித்த சில தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை பெரும் வெற்றிக்கு அடித்தளம் இடுவதாக அமையும்.

மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை தொடர்ந்து அளித்து வருகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்திற்கு வந்த ஒரு நல்ல திட்டத்தைக் கூட சொல்ல இயலாது. ஆனால், இன்று பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொடுத்திருக்கிறார். கர்நாடகம் உறுப்பினர் பெயரை அறிவிக்காவிட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொல்லியிருக்கிறார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயற்கை சீரழிவு இல்லாமல் தான் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என என மத்திய அரசு சொல்லியிருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே மத்திய அரசை விமர்சனம் செய்கின்றன. அவர்களுக்கு நல்ல திட்டங்களைப் பாராட்டுவதற்கு மனமில்லை. ஆட்சி வேறு, கட்சி வேறு. ஆளுநரின் சுற்றுப்பயணத்தை திமுக அநாவசியமாக அரசியலாக்குகிறது. ஆளுநர் மிரட்டுவதாக சொல்கின்றனர். ஆளுநர் மிரட்டவில்லை, இட்டுக்கட்டவில்லை. சட்டப்படி உள்ளதை அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அனுமதியில்லாத இடங்களில் போராடினால் கைது செய்யப்படுவார்கள். திமுக சட்டம் ஒழுங்கை பாதித்து குழப்பத்தை விளைவிப்பதற்காக போராட்டம் செய்கிறது. பல முக்கிய பிரச்சினைகள் இருக்கும்போது இதனை வேண்டுமென்றே கையில் எடுத்திருக்கிறது திமுக.

பயங்கரவாதம் குறித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். மாவோயிஸ்டுகள் குறித்து அரசுக்கு தகவல் கிடைத்தால் அதனை அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இயக்குநர் கவுதமன் உள்ளிட்டவர்கள் பிரிவினைவாத பிண்ணனி உள்ளவர்கள். அவர்கள் யார், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என அறிந்ததால் தான் அவர்களை கைது செய்கிறது. இவர்களின் கைது வரவேற்கத்தக்கது. அவர்கள் நல்ல திட்டங்களை கொண்டுவர விட மாட்டார்கள்.

சேலத்தை தூத்துக்குடியாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களது திட்டம். அரசுகளை மக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கின்றனர். பியூஸ் மானுஷ், கவுதமன், பாரதிராஜா ஆகியோர் தான் மக்களுக்கு நல்லது செய்வது போன்று மாயையை உருவாக்குகின்றனர். போராட்டங்கள் நடத்துவதில் தப்பில்லை. மக்களின் உயிரை வாங்கி விடுவதாக அந்த போராட்டங்கள் இருக்கக்கூடாது என்பதில் அக்கறை உள்ளது. இவர்கள் போன்றவர்களின் ஊடுருவலால் தான் தூத்துக்குடி போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது என்பது என் கருத்து.

நான் யாரையும் தரக்குறைவாக விமர்சித்ததில்லை. பாமக இளைனரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், என்னை தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக் கேட்கிறார். தான் மட்டும் அதிபுத்திசாலி, வேறு எந்தக் கட்சியிலும் புத்திசாலிகள் இல்லை என அவர் நினைக்கிறார். 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால் தான் தேசியக் கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். தகுதியில்லாமல் வரவில்லை. அரசியல்வாதியின் மகளாக இருந்தபோதும் அந்த நிழலில் தலைவராக வரவில்லை. சுய உழைப்பில் தலைவராக வந்திருக்கிறேன்” என தமிழிசை தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

உலகம்

39 mins ago

வணிகம்

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்