கருணாநிதி, கனிமொழி குறித்து அவதூறு கருத்து: ஹெச்.ராஜா மீதான புகாருக்கு முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது கூறப்படும் புகாரில், உரிய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி எம்.பி. குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த ஏப்ரல் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் நலச் சங்கத் தலைவரான குகேஷ் என்பவர், சென்னை நொளம்பூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி புகார் அளித்தார்.

இந்நிலையில், தான் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் குகேஷ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ‘‘ஹெச்.ராஜாவுக்கு எதிரான புகார் மீது உரிய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம். அந்தப் புகாரில் உரிய முகாந்திரம் இல்லை என்றால் மனுவை முடித்துவைத்து உத்தரவிட வேண்டும்’’ என்று நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

19 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்