ரூ.16.39 லட்சம் மோசடி செய்ததாக 2 மின்வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டேரியில் மின்வாரிய அதிகாரி அரங்கேஸ்வரன், ஓட்டேரி காவல் நிலையத்தில் அளித்த புகார்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சென்னை மின் பகிர்மான வட்டம் புளியந்தோப்பு உட்கோட்டம் ஓட்டேரியில் உள்ள மின் வாரிய அலுவலக மேற்பார்வையாளர் வெங்கடேசன், கணக்கீட்டாளர் சீனிவாசன் இருவரும் கடந்த 2017 அக்டோபர் முதல் 2018 மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வசூல் மையத்தில் வசூலான பணம் ரூ.16 லட்சத்து 39 ஆயிரத்து 278ஐ வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்படி, ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டதால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago