அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச ‘இன்சுலின்’ மருந்து கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சர்க்கரை நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 3 வாரங்களுக்குள் தமி ழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

இது தொடர்பாக சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

6.5 கோடி பேர் பாதிப்பு

சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் இன்சுலின் மருந்து வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. 2010 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சர்க்கரை நோயால் 6.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலவச மிக்ஸி, கிரைண்டர், தாலி, சைக்கிள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடியை தண்ணீராக வாரியிறைத்து செலவு செய்யும் தமிழக அரசு, இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும்.

உத்தரபிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்சுலின் மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. அதுபோல தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க அறிவுறுத்த வேண்டும். மேலும், தமிழக முதல்வரின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சர்க்கரை நோயாளிகளையும் சேர்க்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரி யிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்