செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி முகாமில் இருந்து குறி தவறி விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு விழுந்து வெடித்தது. அப்பகுதியில் இருந்த விவசாயிகள் அலறியடித்து ஓடினர்.
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இங்கு ராணுவ பயிற்சிக்காக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வெடிக்கச் செய்தும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு வெடிக்கப்படும் வெடிகுண்டுகளில் ஒன்று குறி தவறி அருகில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்தது. விழுந்த வேகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு மேய்த்தவர்கள் அச்சமடைந்த அலறியடித்து ஓடி யுள்ளனர்.
உடனடியாக ராணுவ பயிற்சி முகாமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வந்த ராணுவத்தினர் அங்கிருந்த வெடித்த குண்டை எடுத்துச் சென்றனர். இது குறித்து மறைமலை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அடிக்கடி இது போன்று விபத்துகள் ஏற்படுவதாக இப் பகுதி மக்கள் தெரிவித் தனர். குடியிருப்பு பகுதி களுக்கு அருகே நடைபெற்ற இச்சம்பவத்தால் இப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
ஆன்மிகம்
28 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago