15 நாளில் குரூப்-2 தேர்வு முடிவு: தி இந்து செய்தி எதிரொலி

By செய்திப்பிரிவு

குரூப்-2 தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பால சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவி யாளர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.

இப்பதவிகளில் 1,064 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு டிசம் பரில் குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். 8 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வெழுதிய பட்டதாரிகள் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இதுபற்றி கடந்த 21-ம் ‘தி இந்து’வில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர் களுக்கு பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பி ரமணியன், “கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலைத் தேர்வின் முடிவு 15 முதல் 20 நாட்களில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்